புதன், செப்டம்பர் 19, 2012

சுந்தர பாண்டியன்


சுந்தர பாண்டியன்

சசிகுமாரை ஒரு இயக்குனராக எனக்கு சுப்ரமணியபுரம் படத்தில் பிடிக்கும். ஒரு
தயாரிப்பாளராக பசங்க படத்தில் பிடிக்கும். ஒரு நடிகராக நாடோடிகள் படத்திலிருந்து பிடிக்கும்.ஆகவே சசிகுமாரின் சுந்தர பாண்டியன் என் எதிர்பார்ப்பில் இருந்த படங்களில் ஒன்று. இது வெளியானவுடன் நான் திரும்பும் பக்கமெல்லாம் படத்தை பற்றி நல்ல ரிப்போர்ட் வரவே
( எப்படியும் புது படம் பார்க்க ஒரு வாரம் எடுத்து கொள்ளும் நான்) , எடுரா டிக்கெட்டை போடா படத்துக்கு என்று ஆர்வத்துடன் தியேட்டர் சென்று விட்டேன் (ஞாயிறு அன்றே பார்த்து விட்ட நான் கொஞ்சம் வேலை பளுவால் பதிவெழுத தாமதமாகி விட்டது )

ஒரு பெண்ணை நண்பர்கள் குழுவே ஆசைப்படஆரம்பிக்க , அதில் ஹீரோவுக்கு மட்டும்
ஹாட்ரிக் அடிக்கிறது விடுவார்களா மற்ற நண்பர்கள் அவர்களின் விரோதத்தை சம்பாதிக்கும் ஹீரோ அவர்களின் துரோகத்தில் சிக்கி கொண்டவர், அதை எப்படி சமாளித்து காதலில் ஜெயிக்கிறார் என்பதே கதை. இதை அறிமுக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தன் திரைக்கதையால் வெற்றிகரமாக படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்

இளையராஜா பட பாடலுடன் அறிமுகமாகும் பேருந்தில் சசிகுமார் அன் கோ (நண்பர்கள்) ஏறியவுடன் டாப் கியரில் வேகமெடுக்கும் திரைக்கதை இடைவேளை வரை கலகலப்பாகவும் இடைவேளைக்கு பின் கொஞ்சம் பரபரப்பாகவும் பயணித்து கிளைமாக்ஸ் சில் ஆக்சன் பிளஸ் ரத்த கலரியுடன் முடிவுக்கு வருகிறது

சசிகுமார்
வயதானவர்களுடன் குத்தாட்டம் ஆடுகிறார் கருத்து பாடல் பாடுகிறார் அனல் பறக்க சண்டை போடுகிறார் கண் அடித்து பெண்களை கிண்டல் செய்கிறார் காதலியுடன் ரொமாண்டிக் காதலும் செய்கிறார் இவை அனைத்தையும் நம்மை ரசிக்கும் படி வைத்திருப்பதில் இயக்குனரின் சாமர்த்தியமும் சசிகுமார் மேல் நமக்கிருக்கும் ஒரு ஆர்வமும் புலப்படுகிறது . இந்த படத்தில் அவர் நடிப்பும் உருவமும் இன்னும் மெருகேறியிருக்கிறது ஒரே தோற்றம் ஒரே கேரக்டர் என்றில்லாமல் இன்னும் வெரைட்டி யான ரோல்களை அவர் தேர்ந்தெடுக்கலாம் )

லட்சுமி மேனன் இவர் திரையில் அறிமுகமாகும் போதே கை தட்டல் வருகிறது.தியேட்டரில் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அவர் எப்படி இம்ப்ரெஸ் செய்துள்ளார் என்பதை
அவர் பேசாதிருக்கும் நேரங்களில் அவர் கண்களே பேசுகின்றன. ஏற்ற இறக்க முக பாவங்களுடன் தன் காதலை சசிகுமரிடம் சொல்லும் இடம் ஒரு சான்று. பேருந்தில் அவரை சுற்றி தான் கதையும் கதாபத்திரங்களும் என்றாலும் தான் பேசாமலேயே கண்களால் முக பாவங்களால் அனைத்தையும் உள் வாங்கி அவர் வெளிபடுத்தும் உணர்வுகள் நன்றாக இருக்கிறது (இவர் நடிக்க போகும் அடுத்த படங்கள் என்னென்ன என்று ஆர்வமாய் விசாரிக்க வைக்கும் அளவு நமை ஈர்த்து விடுகிறார்)

சூரி இவர் பேசுற ஒவ்வொரு வசனமும் தியேட்டரில் ஒரே சிரிப்பலை தான்.அது எப்படிபட்டது என்றால் கடலில் ஒரு அலை கரையில் வந்து மோதி திரும்பும் முன் அடுத்த அலை வந்து மோதுமே அது போல் இவரின் ஒரு டைலாக் சிரிப்பலையை உண்டு பண்ணி அது முடிவதற்குள் அடுத்த சிரிப்பலை உதயமாகிறது. இருந்தும் கொஞ்சம் அதிகமாகியிருந்தால் அது ரசிக்க விடாமல் செய்திருக்கும் என்பதை உணர்ந்து நறுக்கு தெறித்தார் போன்று இயக்குனர் கரெக்டாக அமைத்திருக்கிறார் (சூரி நீங்க நல்லா வருவீங்க )



சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன் கேரக்டர் கன கச்சிதம். அதிரடியான இடங்களில் கூட அவர் அமைதியாய் அளவை பேசும் பாங்கும் அவருக்கான வசனங்களும் அருமையாய் அமைந்திருக்கிறது உதாரணம் தன் பையனுக்கு பெண் கேட்டு வரும் அவர் தென்னவனிடம் பேசி விட்டு மருமகளே தண்ணி கொண்டு வாம்மா என்று சொல்லி வாங்கி குடித்து விட்டு செல்லும் இடம் ரொம்ப அருமையான சீன (அப்பானா இப்படிலே இருக்கணும்)

அப்புக்குட்டி கதையில் முக்கிய திருப்பமாகவும் வில்லனாகவும் வருகிறார். கண்ணாடி மாடி கொண்டு அவர் ரொமாண்டிக் லுக் விடுவதும், நீங்க ஒரு ஓரமா லவ் பண்ணிக்குங்க நான் ஒரு ஓரமா லவ் பண்ணிக்குறேன் என்று பவ்யமாய் சொல்வதும், ஹீரோயினிடம் சிகப்பு தோலா இருந்தா தான் பிடிக்குமா உனக்கு என்று கோபத்தில் எகிறுவதும் என்று மிக இயல்பாய் செய்திருக்கிறார்


பேருந்து காட்சிகள், சிறையிலிருந்து வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற தவிப்புடன் வரும் சசிகுமாரை அவர் அப்பாவும் குடும்பத்தினரும் வரவேற்கும் விதம், காதலை சொல்ல செல்லும் நண்பனை லட்சுமி தோழி வறுத்தெடுப்பது அனுப்புவது ,சசிகுமாரின் முறை பெண்ணுடன் அவர் செய்யும் வம்பு காட்சிகள் ரசிக்க வைக்கின்றன

மகளின் காதலை பொறுக்க முடியாமல் பொங்குவதும் பின் குழம்புவதும் பின் சம்மதம் தெரிவித்தவுடன் ஓடி வந்து அணைத்து கொண்டு அழும் மகளை நெகிழ்ச்சியுடன் அரவணைப்பது என்று தென்னவனும்,நண்பர்களில் இனிகோ பிரபாகரன் விஜய் சேதுபதி யும் தங்கள் பங்குக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

இடைவேளை வரை ஒரு ஹீரோ வீட்டுக்கு கூடவா போகாமல் இருப்பார் ஏனெனில் இடைவேளை வரை ஹீரோ வீட்டில் இருப்பது போல் ஒரு சீன கூட கிடையாது. மேலும் காதல் குறும்பு என்று வருட ஆரம்பிக்கும் கதை பின் நண்பர்களின் துரோகம் பழிவாங்கல் ரத்த கலரி என்று கொஞ்சம் திசை திரும்பி சென்று விடுகிறது மேலும் ஹீரோ கத்தி குத்து எல்லாம் பட்டும் கூட வசனம் பேசி எதிரிகளை வீழ்த்துவது என்ற ஹீரோயிசம், சுப்ரமணியபுரம் துங்கா நகரம் பட காட்சிகளை நினைவுபடுத்தும் படத்தின் கிளைமாக்ஸ் பகுதி என்று மைனஸ் பாயிண்ட்ஸ் களும் படத்தில்
உண்டு.

இசை படத்துக்கு அப்படி ஒன்றும் பயன் சேர்க்கவில்லை இருந்தும் வசனங்கள் பல காட்சிகளை தாங்கி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது.பேருந்து காட்சிகளிலும், சின்ன சந்துகளிலும் அந்த கிளைமாக்ஸ் முள் காட்டிலும் கூட நாம் அங்கேயே இருந்து வேடிக்கை பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார் ஒளிபதிவாளர் பிரேம்குமார்

சுந்தர பாண்டியன் சசிகுமாருக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கிறான்

ஆர்.வி.சரவணன்


5 கருத்துகள்:

  1. சார்... பார்த்து விட்டீர்களா...? நான் இனிமேல் தான்...

    Photos கிடைத்ததா...?

    விமர்சனத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நல்ல படம் அண்ணா.... நானும் பார்த்தேன்...
    சசிக்குமார் என்னைக் கவர்ந்த மனிதர்... சில காட்சிகள் பிடிக்கவில்லை என்றாலும்... மறுபடியும் பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  3. நல்ல விமர்சனம் சார்... நானும் பார்த்துவிட்டேன்..படம் ஏனோ ஒட்டவில்லை..எதார்த்தம் என்று படுத்தி எடுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  4. நான் படங்களே பார்ப்பதில்லை. டிவில போட்டால் சசிக்குமாருக்காக பார்க்கலாம்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்