வெள்ளி, நவம்பர் 15, 2013

பாண்டிய நாடு





பாண்டிய நாடு 


ஒரு படத்தை நல்லாருக்கும் என்று எதிர்பார்த்து செல்வதை விட எதிர்பாராமல் போய்  அது நன்றாக இருந்து விட்டால் கிடைக்கும் திருப்தியே தனி தான். படம் பற்றி  நல்ல ரிசல்ட் வரவே உடனே படையெடுத்தேன் பாண்டிய நாட்டுக்கு(தியேட்டருக்கு). படத்தை பற்றி ஒரு சில வரிகளில் சொல்லி விடலாம்.அது இப் பதிவின் முடிவில் பார்ப்போம்

ஒரு நகரை  ஆட்டி படைக்கும் தாதா, ஹீரோவின் அண்ணனை கொன்று 
விட ஹீரோவும் (அவர் அப்பாவும் ) சமயம் பார்த்து பழிக்கு  பழி வாங்கும் 
கதை தான். ஆனால் நமை ஈர்த்து சீட்டில் இழுத்து பிடித்து உட்கார வைத்திருப்பதில் தெரிகிறது இயக்குனரின் சாமர்த்தியம் .ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் இயக்குனர் மசாலாத்தனமான 
காட்சிகள் எதிலும் சிக்காமல் எந்த காம்ப்ரமைஸும்  செய்து கொள்ளாமல் படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை நூல் பிடித்தார் போன்று படத்தை தந்திருக்கிறார்.

உதாரணத்திற்கு கட்டிங் போடலாமா என்று விஷால் கேட்டு சூரி சரி என்று சொல்ல அடுத்த காட்சி  சரக்கு அடிப்பதை தான் காட்ட போகிறார்கள் என்று நமக்கு தோன்றும் யோசனையை தூக்கி அடிக்கும் விதம்  இயக்குனர் தரும் காட்சி ஒரு சாம்பிள் .

வில்லனின் குரூப் இரண்டு அணியாக அடித்து கொண்டு நிற்க. இவர் தான் வில்லன்  என்று நம் நினைப்பை தகர்த்து வேறொருவர் வில்லனாவது 
மட்டுமல்லாமல் அவர் தலைமையேற்றவுடன் மாறும் அவரது கெட்டப் 
அட என்று ஆச்சரியப்படும் இடம்.

விஷால் இயக்குனரின் நடிகனாக இதில் களமிறங்கி இருக்கிறார் . திக்கி பேசுவது,  (இடைவேளைக்கு பின் அவ்வளவாக இல்லையே ) சண்டையை கண்டு பயந்து பின் வாங்குவது, தான் காதலிக்கும்  பெண்ணை சந்தோசமாய் சுற்றி வருவது,சண்டை கட்சிகளில் கூட வழக்கமான முக பாவங்கள் வாய்ஸ் தவிர்த்து  என்று இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார் அதிலும் கிளைமாக்ஸ் சில் வில்லனின் ஆட்கள் அவரை நெருங்கும் போது குரோதம் வெளிப்பட ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் வெரி குட் விசால் என்று சொல்ல வைக்கிறார் 

லட்சுமி மேனன் இதில்  டீச்சராக வருகிறார். விஷாலை தன் 
குறுகுறுவென்ற பார்வையால் அளவிடுகிறார்.  அவரது அம்மா 
விஷாலை அண்ணன் என்று சொல்ல விஷால் மிரள அதை குறும்பு பார்வையால் ரசிக்கும் இடம் அவரை போலவே அழகு 

சூரி அனாவசிய வசனங்கள் ஏதுமில்லாது அவசிய வசனங்களால் நம்மை புன்னகைக்க வைத்திருக்கிறார் 

வில்லன்  ஷரத் லோஹிதஸ்வா படம் பார்க்கும் போது எதிரில் வந்தால் 
அவர் சட்டையை பிடித்து விடலாமா எனும் அளவுக்கு அவர் பாத்திரமும் 
அவர் நடிப்பும் இருக்கிறது. என்னா  ஒரு வில்லத்தனம்





பாரதி ராஜா இதில் விஷாலின் அப்பாவாக நடுத்தர வர்க்கத்தின்  குடும்ப தலைவராக கதா பாத்திரம். அதை அவரது அந்த ட்ரேட் மார்க் குரலாலும் தன் இயல்பான நடிப்பாலும் சிறப்பாக்கியிருக்கிறார். உனக்கு குழந்தை பிறக்க போறதை நினைச்சு சந்தோசபடறதா இல்லே அடி வாங்கிட்டு வந்திருக்கிற உன்னை நினைச்சு வருத்தப்படறதா என்ற அங்கலாய்ப்பிலும் பிரேத பரிசோதனை வேண்டும் என்று  மருத்துவமனையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியிலும்,விஷால் கையை பிடித்து கொண்டு நெகிழ்ந்து , நான்  இப்ப சந்தோசமா இருக்கேன் என்று வார்த்தைகளாலும் நடிப்பாலும் அதை வெளிபடுத்துவதிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார் 

விக்ராந்த் விஷாலின் நண்பனாக வருகிறார் ஒரு பைட் ஒரு பாட்டு  கூட அவருக்கு உண்டு என்ற அளவில் அவருக்கு கிடைத்திருப்பது நல்ல ரோல் 

 
இமான் இசையில் டையரெ , ஒத்தகடை மச்சான், பை பை பாடல்களை 
ரசிக்க முடிகிறது. அந்த டப்பாங்குத்து பாடல் கதையின் சீரான போக்கிற்கு 
நடுவே  திணிக்கப்பட்ட ஒன்று .( பாடலும் டான்சும் தாளம் போட 
வைக்கிறது) பாடல் முடிந்ததும் கதையை எங்கே விட்டோம் என்று 
நம்மை யோசிக்க வைத்து விடுகிறது  

பொண்ணை பிக்கப் பண்றதுக்கு முன்னாடியே ட்ராப்  பண்ற பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என்பது போன்ற வசனங்கள் பல இடங்களில் 

இயல்பாக பொருந்துகிறது.

 நெருக்கமான வீடுகளுக்கு இடையே சந்தில் புகுந்து புறப்பட்டிருக்கும் கேமரா,கிளைமாக்ஸ் காட்சி மற்றும் அந்த பஸ் ஸ்டான்ட் சண்டை காட்சியில் மதி மயக்குகிறது ஒளிப்பதிவு. 

வில்லன் குரூப் பிடம் சூரி வந்து செல் போனை சுண்டல் கொடுப்பது 
போல் கொடுத்து செல்லும் இடம் கண்டிப்பாக லாஜிக் இடிக்க வைக்கும் 
ஒன்று வில்லன் குரூப் அதை நம்பி பயன்படுத்துவது கமிசனர் மற்றும் அமைச்சரையே கையில் வைத்திருப்பவர்கள் விஷால் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது என்னை நீங்களும் பின் தொடர்ந்து வராதீங்க என்று சொல்லும் லட்சமி மேனன் செல் போன் கடையில் வந்து இழைவது 
( அந்த காட்சியை விஷால் வீட்டில் நடப்பதாக வைத்திருக்கலாம்) 
என்றெல்லாம் குற்றம் கண்டுபிடிக்க நம்மை யோசிக்க  விடாமல் 
இயல்பான திரைக்கதை மற்றும், கதாபாத்திரங்கள்,வசனங்கள் என்று நேர்த்தியாக சொன்னதன் மூலம் இயக்குனர் சுசீந்திரன் 
உருவாக்கியிருக்கும் இது 

செழிப்பான பாண்டிய நாடு

FINAL PUNCH

வில்லனின் அடியாள் பரணி, விஷாலை காலால் மிதித்து துவம்சம் 
செய்யும் போது விஷால் பக்கத்தில் கிடக்கும் பாட்டிலை கேமரா காட்டும்.
 எப்படியும் அதை எடுத்து தான் விஷால் அடிக்க போகிறார் என்று நமக்கு தெரிந்து விடுகிறது. இருந்தும் அதற்கு முன்பே நாமே எடுத்து அடித்து விடலாமா என்ற பரபரப்பை படம் பார்க்கும் நமக்குள் ஏற்படுத்திய விதத்தில் இந்த படம் வெற்றி பெறுகிறது

ஆர்.வி.சரவணன் 

6 கருத்துகள்:

  1. படம் நல்லாயிருக்கு அண்ணா...
    உங்க விமர்சனமும் அருமை....

    பதிலளிநீக்கு
  2. கணினி கோளாறு காரணமாக சில நாட்களாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)

    பதிலளிநீக்கு
  3. படம் பார்க்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம். நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நல்ல அலசல்! நானும் படம் பார்த்துவிட்டு ஒரு விமர்சனம் எழுதிவிட்டேன் உங்கள் அளவு minute ஆன் விமர்சனம் இல்லை! உங்கள் விமர்சனம் நல்ல விமர்சனம்!

    பதிலளிநீக்கு
  5. படம் நன்றாக இருக்கிறது.. கடந்த வாரம் தான் பார்த்தேன் :-) நிச்சயம் திரையரங்கில் பார்க்கலாம்.. பார்ப்பவர்கள் பணம் வீணாகாது :-)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்